சிங்கள இனவாதத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி சிங்களவர்களால் பேணப்பட்டு வருகிறது.
-தெ. றஞ்சித்குமார்-
இலங்கைத் தீவில் 1833இல் பிரித்தானியார்களால் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர், சிங்களவர்களின் தனித்தனி இராச்சியங்கள் பின் சிங்களவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டதும் வெறி பிடித்த இனவாதிகள் கூறு தங்கள் ஒடுக்கு முறையை தீவிரப்படுத்த ஆரம்பித்தனர். இதன் விளைவுகள் தமிழர் இரண்டாவது பட்சமாக்கப்பட்டதும். தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்டதும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பும்.
ஆரம்ப கட்டமாகவே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டரநாயக்காவின் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டு இனப்பாகுபாடு தீவிரமாக்கப்பட்டது..
சிங்கப்பூரில் பல்மொழிப் பிரச்சினை தோன்றிய போது லீ குவான் யூ எல்லா மொழிகளுக்கும் அரச ஏற்பினை ஏற்படுத்தி, ஆங்கில தமிழ், சீன, மலாய மொழிகளுக்கு அரச மொழி அந்தஸ்தைக் கொடுத்து மொழிவாரியான போட்டி பொறாமைகளையும் அரசியல் அல்லல்களையும் தவிர்த்துக் கொண்டார்.
ஆனால், இங்கு அவ்வாறு நடைபெறவில்லை. தனிப்பட்ட கோபதாபங்கள், பதவி ஆசை, புகழ், குடும்ப நலன்கள் ஆகியன சிங்களத் தலைவர்களைத் தூரப் பார்வையுடன் சிந்திக்காது தடுத்தன. அதற்கு மற்றொரு காரணம் பொறாமை என்றும் கூறலாம். ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் தங்கள் கடும் உழைப்பாலும் கல்வியாலும். கெட்டித்தனத்தாலும் அரச நிர்வாகத்தில் முக்கிய இடம்பெற்றனர். தொழில் ரீதியான மேம்பாட்டிலும் கொடிகட்டிப் பறந்தனர். இதைச் சிங்கள மக்களும், சிங்களத் தலைவர்களும் வெகுவாக விரும்பவில்லை. தங்களில் இருக்கும் தரக் குறைவின் நிமித்தமே, தகைமைக் குறைபாட்டின் நிமித்தமே, தமிழர்கள் தரணி ஆளத்தகுதி பெற்றிருந்தார்கள் என்பதை சிங்களத் தலைவர்கள் ஏற்க மறுத்தனர். ஆங்கிலேயர்கள் இனங்களைக் பிரித்து அரசியல் இலாபம் பெறவே தமிழர்களுக்குப் பக்கச் சார்பாக நடந்து கொண்டனர் என்று கூறி தமிழர்களின் நேர்மையான கடும் உழைப்பினை, நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்தினர்.
ஆங்கில மொழியில் இரு இனத்தவர்களும் பரீட்சைகள் எழுதிய போது தகுதி பெற்றவர்கள் பெரும்பாலும் தமிழ் பேசும் மாணவர்களே என்ற உண்மை ஆங்கிலேயர் காலத்தில் மட்டுமல்லாது சுதந்திரத்தின் பின்னர் 1956 வரையிலும் கூட அவ்வாறே இருந்ததைக் காணலாம். வைத்தியத் தொழில், சட்டத் தொழில், பொறியியற் தொழில், கணக்காளர் தொழில், எழுது வினைஞர் தொழில் மட்டுமல்லாது வேறு பல துறைகளிலும் தமிழர்கள் தான் 1956 வரை பொதுப் பரீட்சைகளில் முன்னணியில் நின்றனர்.
ஆங்கிலேயர் பக்கச் சார்பாக நடந்து கொண்டார்கள் என்றால் 1948 தொடக்கம் 1956 வரையில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில், ஆங்கில மொழி நிலைத்திருந்த அக்காலத்தில் எப்படித் தமிழ் மாணவ மாணவியர் சகல துறைகளிலும் முன்னணியில் நின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. இரு இன மக்களும் ஒருமித்து ஆங்கிலத்தில் கல்வி கற்ற கல்லூரிகளில் பொதுப் பரீட்சைகளில் (விகிதாசார அடிப்படையில்) யார் பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் தெரிய வரும். ஆகவே, சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்ததே தெற்கில் உள்ள தமிழ் மக்கள் சுதந்திர இலங்கையிலும் கொடி கட்டிப் பறப்பதை நிறுத்தி ஓரம் கட்டுவதற்கே.
சிங்கள பௌத்தர் மனதில் அப்பொழுது ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து வந்திருந்தது. அதாவது சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையினராக வாழும் இந்த நாட்டில் தமிழர்கள் பெருவாரியான கல்வி, தொழிற்கல்வி தொடர்பான துறைகளில் முன்னிலை வகித்தனர். தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் வணிகத்தில், வாணிபத்தில் முன்னிலை வகித்தனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் பெருந்தோட்ட வேலைகள் யாவற்றையும் தமதாக்கிக் கச்சிதமாகச் சிறந்த பணியைப் பல அல்லகள், தடங்கல்கள், வறுமை நிலை போன்றவற்றின் மத்தியிலும் செய்து தொழிலாளர்கள் என்ற முறையில் முன்னிலையில் நின்றனர்.
சிங்களக் கிறீஸ்தவர்கள் கல்வி நிலையங்களை உருவாக்கி, நல்ல கல்லூரிகளை வழிநடத்தி வந்தனர். ஆனால், சிங்கள ஆட்சியாளர் கையில் அதிகாரம் வந்தும் அவர்;களால் உருப்படியாக் சிங்கள பௌத்தர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஒரு ஏமாற்றம் அவர்களைப் பீடித்திருந்தது. அதை நிவர்த்தி செய்யத் தம்மை மேல் நிலைப்படுத்தாது, சிறுபான்மையினரைத் துன்புறுத்தித் துரத்த நடவடிக்கை எடுத்தார்கள் அவர்கள். தமிழ் பேசும் தொழிலாளர்களுடன் தொடங்கிய அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் அடுத்து சிங்களம் பேசா அனைவரையும் பாதிக்கும் விதத்தில் அமைந்தன. அது தான் சிங்களம் மட்டும் சட்டம்.
சில காலத்தின் பின் கத்தோலிக்கக் கல்லூரிகளைப் பாதிக்கும் விதத்தில் சட்டம் இயற்றப்பட்டது. முஸ்லிம் அமைச்சர் பதியுதீன் மகமூட் காலத்தில் கல்விப்படித்தரச் சமநிலைப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. புதிய சட்டங்கள் கொண்டு வந்து அந்நிய செலாவணி சம்பந்தமாகப் பெருந் தனவந்தர்களாக இருந்த முஸ்லிம் வியாபாரிகளைக் கம்பி எண்ண வைத்தனர்.
கிறிஸ்தவராகப் பிறந்து அரசியலுக்காகப் பௌத்தர்களாக மாறிய பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன போன்றோர்களே தாம் உண்மையான பௌத்தர்கள் என்றும், பௌத்த சமயத்தினர் தம்மை ஏற்க வேண்டும் என்றும் நாட்டின் நலன் கருதாமல் வருங்கால சந்ததியினர்களின் நல்வாழ்வினைக் கருத்தில் எடுக்காமல், ஜனநாயக அரசியல் தமக்குத் தந்த அதிகாரத்தை சுயநல காரணங்களுக்காகப் பாவித்தார்கள்.
1952 இல் பிரதமமந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது டட்லி கூறிய சில கருத்துகள் மனதில் நிலைநிறுத்தப்படக் கூடியவை. எவர் எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைக் கடைப்பிடித்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மற்றவர்கள் அனைவருவடனும் சரிசமமான நிலையில் இருந்து வாழ்ந்து வரக்கூடியவாறு என்னுடைய நிர்வாகம் அமைந்திருக்கும் " என்று கூறியே அவர் 30.03.1952 அன்று பதவி ஏற்றார். ஆவர் கூறிய கருத்து உண்மையாதனதா அல்லது அரசியலுக்கானதா என்பதை அறிவதற்க முன்னமே சிக்கல்கள் உருவாகிவிட்டன.
1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி அன்று டி.எஸ்.இன் அமைச்சர் அவையின் சிரேஷ்ட அமைச்சரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தமது மந்திரிப் பதவியை இராஜிநாமா செய்து புதியதொரு கட்சியை (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை) ஆரம்பித்திருந்தார். இலங்கைக்கு சமஷ்டி அரசியல் முறையே சிறந்தது என்று முன்னர் கருத்து வெளியிட்டிருந்த அவர் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறியதும் எதனைச் சொன்னால் பதவிக்கு வரலாம் என்று சிந்தித்து ஆட்சியில் அமர்வதற்காக "24 மணிநேரத்தில் தனிச் சிங்களம்" என்ற வாக்குறுதியை முன் வைத்து 1956 ஆம் ஆண்டில் சிங்கள மக்களிடையே அமோக வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தார். அதற்கு முன் இரு பிரதம மந்திரிகள் டி.எஸ்.ஐ.அடுத்த ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பதவி ஏற்றிருந்தனர்.
கொத்தலாவலையின் ஒரு செயலே எஸ்.டபிள்யூ.ஆர்.டி.யை " 24 மணித்தியாலயத்தில் தனிச்சிங்களம்" என்ற கோரிக்கையை தேர்தலில் முன்வைக்க வெகுவாக உதவியது. பிரதம மந்திரியாக அவர் யாழ்ப்பாணம் சென்றபோது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்தில் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் உத்தியோக பூர்வ அந்தஸ்தை வழங்கப் போவதாக அவர் வாக்களித்தார். இதற்கு எதிராகவே எஸ்.டபிள்யூ.ஆர்.டியின் "சிங்கள் மட்டும்" கோஷம் எழுந்தது. அதனால் சிங்கள மக்களின் அமோக வாக்குகளுடன் பண்டார நாயக்க ஆட்சிப்பீடத்தை கைப்பற்றிக் கொண்டார்.
இனவாதத்தை முன்வைத்து சிங்கள மக்களின் அமோக அதரவைப் பெற்று ஆட்சிக்குவரும் நிலை இன்று வரை சிறிலங்காவில் தொடர்கிறது. நவீன உலகின் மாற்றங்களோடும், சிந்தனைகளோடும் இணைந்து கொள்ள சிங்களவர்கள் இன்னும் தயாராக இல்லை. ஆட்சியதிகாரத்தை தக்கவைப்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்ப்பதும், இனவாதத்தால் வளர்hக்கப்பட்ட அந்த மக்கள் தொடாந்தும் இனவாதிகளையே தங்கள் தலைவர்களாக தேர்ந்தெடுப்பதும் சிறிலங்காவின் வரலாற்றுத் தொடாச்சியாக காணப்படுகிறது.
மூலம்: ஈழமுரசு
இலங்கைத் தீவில் 1833இல் பிரித்தானியார்களால் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர், சிங்களவர்களின் தனித்தனி இராச்சியங்கள் பின் சிங்களவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டதும் வெறி பிடித்த இனவாதிகள் கூறு தங்கள் ஒடுக்கு முறையை தீவிரப்படுத்த ஆரம்பித்தனர். இதன் விளைவுகள் தமிழர் இரண்டாவது பட்சமாக்கப்பட்டதும். தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்டதும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பும்.
ஆரம்ப கட்டமாகவே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டரநாயக்காவின் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டு இனப்பாகுபாடு தீவிரமாக்கப்பட்டது..
சிங்கப்பூரில் பல்மொழிப் பிரச்சினை தோன்றிய போது லீ குவான் யூ எல்லா மொழிகளுக்கும் அரச ஏற்பினை ஏற்படுத்தி, ஆங்கில தமிழ், சீன, மலாய மொழிகளுக்கு அரச மொழி அந்தஸ்தைக் கொடுத்து மொழிவாரியான போட்டி பொறாமைகளையும் அரசியல் அல்லல்களையும் தவிர்த்துக் கொண்டார்.
ஆனால், இங்கு அவ்வாறு நடைபெறவில்லை. தனிப்பட்ட கோபதாபங்கள், பதவி ஆசை, புகழ், குடும்ப நலன்கள் ஆகியன சிங்களத் தலைவர்களைத் தூரப் பார்வையுடன் சிந்திக்காது தடுத்தன. அதற்கு மற்றொரு காரணம் பொறாமை என்றும் கூறலாம். ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் தங்கள் கடும் உழைப்பாலும் கல்வியாலும். கெட்டித்தனத்தாலும் அரச நிர்வாகத்தில் முக்கிய இடம்பெற்றனர். தொழில் ரீதியான மேம்பாட்டிலும் கொடிகட்டிப் பறந்தனர். இதைச் சிங்கள மக்களும், சிங்களத் தலைவர்களும் வெகுவாக விரும்பவில்லை. தங்களில் இருக்கும் தரக் குறைவின் நிமித்தமே, தகைமைக் குறைபாட்டின் நிமித்தமே, தமிழர்கள் தரணி ஆளத்தகுதி பெற்றிருந்தார்கள் என்பதை சிங்களத் தலைவர்கள் ஏற்க மறுத்தனர். ஆங்கிலேயர்கள் இனங்களைக் பிரித்து அரசியல் இலாபம் பெறவே தமிழர்களுக்குப் பக்கச் சார்பாக நடந்து கொண்டனர் என்று கூறி தமிழர்களின் நேர்மையான கடும் உழைப்பினை, நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்தினர்.
ஆங்கில மொழியில் இரு இனத்தவர்களும் பரீட்சைகள் எழுதிய போது தகுதி பெற்றவர்கள் பெரும்பாலும் தமிழ் பேசும் மாணவர்களே என்ற உண்மை ஆங்கிலேயர் காலத்தில் மட்டுமல்லாது சுதந்திரத்தின் பின்னர் 1956 வரையிலும் கூட அவ்வாறே இருந்ததைக் காணலாம். வைத்தியத் தொழில், சட்டத் தொழில், பொறியியற் தொழில், கணக்காளர் தொழில், எழுது வினைஞர் தொழில் மட்டுமல்லாது வேறு பல துறைகளிலும் தமிழர்கள் தான் 1956 வரை பொதுப் பரீட்சைகளில் முன்னணியில் நின்றனர்.
ஆங்கிலேயர் பக்கச் சார்பாக நடந்து கொண்டார்கள் என்றால் 1948 தொடக்கம் 1956 வரையில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில், ஆங்கில மொழி நிலைத்திருந்த அக்காலத்தில் எப்படித் தமிழ் மாணவ மாணவியர் சகல துறைகளிலும் முன்னணியில் நின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. இரு இன மக்களும் ஒருமித்து ஆங்கிலத்தில் கல்வி கற்ற கல்லூரிகளில் பொதுப் பரீட்சைகளில் (விகிதாசார அடிப்படையில்) யார் பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் தெரிய வரும். ஆகவே, சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்ததே தெற்கில் உள்ள தமிழ் மக்கள் சுதந்திர இலங்கையிலும் கொடி கட்டிப் பறப்பதை நிறுத்தி ஓரம் கட்டுவதற்கே.
சிங்கள பௌத்தர் மனதில் அப்பொழுது ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து வந்திருந்தது. அதாவது சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையினராக வாழும் இந்த நாட்டில் தமிழர்கள் பெருவாரியான கல்வி, தொழிற்கல்வி தொடர்பான துறைகளில் முன்னிலை வகித்தனர். தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் வணிகத்தில், வாணிபத்தில் முன்னிலை வகித்தனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் பெருந்தோட்ட வேலைகள் யாவற்றையும் தமதாக்கிக் கச்சிதமாகச் சிறந்த பணியைப் பல அல்லகள், தடங்கல்கள், வறுமை நிலை போன்றவற்றின் மத்தியிலும் செய்து தொழிலாளர்கள் என்ற முறையில் முன்னிலையில் நின்றனர்.
சிங்களக் கிறீஸ்தவர்கள் கல்வி நிலையங்களை உருவாக்கி, நல்ல கல்லூரிகளை வழிநடத்தி வந்தனர். ஆனால், சிங்கள ஆட்சியாளர் கையில் அதிகாரம் வந்தும் அவர்;களால் உருப்படியாக் சிங்கள பௌத்தர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஒரு ஏமாற்றம் அவர்களைப் பீடித்திருந்தது. அதை நிவர்த்தி செய்யத் தம்மை மேல் நிலைப்படுத்தாது, சிறுபான்மையினரைத் துன்புறுத்தித் துரத்த நடவடிக்கை எடுத்தார்கள் அவர்கள். தமிழ் பேசும் தொழிலாளர்களுடன் தொடங்கிய அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் அடுத்து சிங்களம் பேசா அனைவரையும் பாதிக்கும் விதத்தில் அமைந்தன. அது தான் சிங்களம் மட்டும் சட்டம்.
சில காலத்தின் பின் கத்தோலிக்கக் கல்லூரிகளைப் பாதிக்கும் விதத்தில் சட்டம் இயற்றப்பட்டது. முஸ்லிம் அமைச்சர் பதியுதீன் மகமூட் காலத்தில் கல்விப்படித்தரச் சமநிலைப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. புதிய சட்டங்கள் கொண்டு வந்து அந்நிய செலாவணி சம்பந்தமாகப் பெருந் தனவந்தர்களாக இருந்த முஸ்லிம் வியாபாரிகளைக் கம்பி எண்ண வைத்தனர்.
கிறிஸ்தவராகப் பிறந்து அரசியலுக்காகப் பௌத்தர்களாக மாறிய பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன போன்றோர்களே தாம் உண்மையான பௌத்தர்கள் என்றும், பௌத்த சமயத்தினர் தம்மை ஏற்க வேண்டும் என்றும் நாட்டின் நலன் கருதாமல் வருங்கால சந்ததியினர்களின் நல்வாழ்வினைக் கருத்தில் எடுக்காமல், ஜனநாயக அரசியல் தமக்குத் தந்த அதிகாரத்தை சுயநல காரணங்களுக்காகப் பாவித்தார்கள்.
1952 இல் பிரதமமந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது டட்லி கூறிய சில கருத்துகள் மனதில் நிலைநிறுத்தப்படக் கூடியவை. எவர் எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைக் கடைப்பிடித்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மற்றவர்கள் அனைவருவடனும் சரிசமமான நிலையில் இருந்து வாழ்ந்து வரக்கூடியவாறு என்னுடைய நிர்வாகம் அமைந்திருக்கும் " என்று கூறியே அவர் 30.03.1952 அன்று பதவி ஏற்றார். ஆவர் கூறிய கருத்து உண்மையாதனதா அல்லது அரசியலுக்கானதா என்பதை அறிவதற்க முன்னமே சிக்கல்கள் உருவாகிவிட்டன.
1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி அன்று டி.எஸ்.இன் அமைச்சர் அவையின் சிரேஷ்ட அமைச்சரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தமது மந்திரிப் பதவியை இராஜிநாமா செய்து புதியதொரு கட்சியை (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை) ஆரம்பித்திருந்தார். இலங்கைக்கு சமஷ்டி அரசியல் முறையே சிறந்தது என்று முன்னர் கருத்து வெளியிட்டிருந்த அவர் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறியதும் எதனைச் சொன்னால் பதவிக்கு வரலாம் என்று சிந்தித்து ஆட்சியில் அமர்வதற்காக "24 மணிநேரத்தில் தனிச் சிங்களம்" என்ற வாக்குறுதியை முன் வைத்து 1956 ஆம் ஆண்டில் சிங்கள மக்களிடையே அமோக வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தார். அதற்கு முன் இரு பிரதம மந்திரிகள் டி.எஸ்.ஐ.அடுத்த ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பதவி ஏற்றிருந்தனர்.
கொத்தலாவலையின் ஒரு செயலே எஸ்.டபிள்யூ.ஆர்.டி.யை " 24 மணித்தியாலயத்தில் தனிச்சிங்களம்" என்ற கோரிக்கையை தேர்தலில் முன்வைக்க வெகுவாக உதவியது. பிரதம மந்திரியாக அவர் யாழ்ப்பாணம் சென்றபோது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்தில் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் உத்தியோக பூர்வ அந்தஸ்தை வழங்கப் போவதாக அவர் வாக்களித்தார். இதற்கு எதிராகவே எஸ்.டபிள்யூ.ஆர்.டியின் "சிங்கள் மட்டும்" கோஷம் எழுந்தது. அதனால் சிங்கள மக்களின் அமோக வாக்குகளுடன் பண்டார நாயக்க ஆட்சிப்பீடத்தை கைப்பற்றிக் கொண்டார்.
இனவாதத்தை முன்வைத்து சிங்கள மக்களின் அமோக அதரவைப் பெற்று ஆட்சிக்குவரும் நிலை இன்று வரை சிறிலங்காவில் தொடர்கிறது. நவீன உலகின் மாற்றங்களோடும், சிந்தனைகளோடும் இணைந்து கொள்ள சிங்களவர்கள் இன்னும் தயாராக இல்லை. ஆட்சியதிகாரத்தை தக்கவைப்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்ப்பதும், இனவாதத்தால் வளர்hக்கப்பட்ட அந்த மக்கள் தொடாந்தும் இனவாதிகளையே தங்கள் தலைவர்களாக தேர்ந்தெடுப்பதும் சிறிலங்காவின் வரலாற்றுத் தொடாச்சியாக காணப்படுகிறது.
மூலம்: ஈழமுரசு